கடனுக்காக வீட்டை இழக்கும் நட்சத்திர தம்பதி


கடனுக்காக வீட்டை இழக்கும் நட்சத்திர தம்பதி

image

நடிகை நிரோஷா - நடிகர் ராம்கி தம்பதியினர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஏலத்தில் விட 2 வங்கிகள் முடிவு செய்து அறிவித்துள்ளன.

`சின்னப்பூவே மெல்லப்பேசு\' படத்தில் அறிமுகமான நடிகர் ராம்கி, செந்தூரப் பூவே படத்தில் நிரோஷாவுடன் நடித்தபோது, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராம்கி-நிரோஷா தம்பதியினர் ஜெமினி பார்சன் காம்ப்ளக்சில் வீடு வாங்கினர். இந்த வீட்டை வங்கியில் அடமானம் வைத்து, தொழில் செய்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் போனது.

இவர்களின் வீட்டிற்கான கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 2 கோடி ரூபாய் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என்று இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்தக் கடன் தொகைக்காக ராம்கி-நிரோஷா தம்பதியின் வீடு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதியன்று ஏலத்தில் விடப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)